Tuesday, March 30, 2010

உனைப்பார்த்த நினைவு

உறங்காது இரவு
ஆயிரம் கனவு
உனைப்பார்த்த நினைவு

ஒரு முனை காந்தம் போல்
உரசிப்போகும் பார்வை
மயக்கத்தில் மூன்றுமுறை
கடித்திகொண்டேன் நாவை

வெயில் போல
வெட்பம் ஏரிடும்
நீ விலகினால் என்
நிழலும் வாடிடும்

நேரம் தெரியாமல்
காத்திருப்பேன்
நீ நெருங்கும் நேரம்
மட்டும் நிறுத்தி வைப்பேன்

எனக்குள் பேசும்
உன் குரலை
என்னிடம்
பேச கூப்பிடுவேன்

இரவில் தினமும்
கொல்லுகிராய்
பகலில் எதயோ
மெல்லுகிராய்

தயக்கம் வந்து
குனிந்தது போல்
எனக்குள் உன்னிடம்
பேசிக்கொண்டேன்

பழக்கம் இல்லா
உற‌வுகள் போல்
பாதிவார்த்தையில்
திரும்பாதே

க‌ண் முன் வந்தாய்
கனவிலும் வந்தாய்
கடைசியில் அறிமுகம்
இல்லை என்றாய்

என் பகலும் இரவும்
இடைவெளி அதிகம்
என் விழியை திருடி
தூரம் சென்றாய்..