உறங்காது இரவு
ஆயிரம் கனவு
உனைப்பார்த்த நினைவு
ஒரு முனை காந்தம் போல்
உரசிப்போகும் பார்வை
மயக்கத்தில் மூன்றுமுறை
கடித்திகொண்டேன் நாவை
வெயில் போல
வெட்பம் ஏரிடும்
நீ விலகினால் என்
நிழலும் வாடிடும்
நேரம் தெரியாமல்
காத்திருப்பேன்
நீ நெருங்கும் நேரம்
மட்டும் நிறுத்தி வைப்பேன்
எனக்குள் பேசும்
உன் குரலை
என்னிடம்
பேச கூப்பிடுவேன்
இரவில் தினமும்
கொல்லுகிராய்
பகலில் எதயோ
மெல்லுகிராய்
தயக்கம் வந்து
குனிந்தது போல்
எனக்குள் உன்னிடம்
பேசிக்கொண்டேன்
பழக்கம் இல்லா
உறவுகள் போல்
பாதிவார்த்தையில்
திரும்பாதே
கண் முன் வந்தாய்
கனவிலும் வந்தாய்
கடைசியில் அறிமுகம்
இல்லை என்றாய்
என் பகலும் இரவும்
இடைவெளி அதிகம்
என் விழியை திருடி
தூரம் சென்றாய்..