Wednesday, May 13, 2009

கர்ம வீரன் ..

my depressions and despirations on the election day ..

இரவின் கருவில்
விடியல் தரும் 
ப‌கலவன் 
பிறந்தான் 

வெளிச்சம் இட்டுரைத்தான்
வெயிலாய்
சுட்டுரைத்தான்..

எங்கள் குட்டையில்
தாமரை பூத்தது
நிழலின் நிறத்தில்
வெளிச்சம் பிறந்தது

இவனை போன்ற 
தலைவன்
பிறக்க இந்த‌
மண்ணில்

கொடுத்து வைத்தது
யார் 
கருவுற்ற 
பெண்ணில்

வாழை குறுத்தின்
துளி கூட‌
வெட்க்கப்படும்
தூய்மை

கல்விக்கண் உயிர்
கொடுத்து
நீ வளர்த்த 
தாய்மை

உனக்கு ஒருமுறை
ஓட்டுப்போட்டிட‌
உனைப்போல் யாரும் இல்லை
வாழ்ந்து காட்டிட ..

No comments: