Wednesday, May 6, 2009

மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள் ..

இரைதேடும் பல்லிகளும்
நாம் இரையாகும் 
நேரமும்

நிற்கும் சுவரில்
ஓடிகொண்டிருந்தது

அடுத்த மாத 
அலுவல் குறிக்க‌
காற்றும் காலண்டரை
புரட்டிக்கொண்டிருந்தது

வாடை காற்றுதான்
வாடகை தந்தது
வெட்ப்பத்தை வெளியே
விசிறி எரிந்தது

ஆணியடித்தது போல்
நின்ற‌ கண்ணாடி
வேடிக்கை 
பார்த்த‌து 

தீக்குச்சியின் சாபம்
மெழுகு விளக்கையும் 
பற்றியது

தலைவந்தான்
இருவருக்கும்
கொல்லி வைப்பான்

நாட்டில் நான் காணும்
மனிதனின் குணங்கள்
என் வீட்டில் இருக்கும்
பொருட்களின் இனங்கள் ..

மீண்டும் ஒருமுறை
வாசித்துப் பாருங்கள்
நான் கூறும் உண்மையை
யோசித்துப்பாருங்கள் ..

No comments: