Wednesday, September 9, 2009

ஆழமில்லை.

பாதிவழியில்
பதில் போல்
திரும்பிவிட்டது

பறக்க விட்ட‌
கேள்விகள் எல்லாம்

விடையின்றி
வினாக்குறிபோல்

அதிர்ஷ்ட காற்று
அல்ல
என் பக்கம்
அடித்த‌து


சைகை
மொழிகள்
பழகியிருந்தால்
அசைவிலும்
அவள் பெயர்
எழுதிருப்பேன்

அவள் கண்களை
காணும்
துணிவு இருந்தால்
கார்கிலில் கூட‌
தனித்திருப்பேன்

பாறை கூட‌
உரையாடும்
எதிரொலியாக‌

என் பாதிவரியில்
திரும்பிவிட்டாய்
அறுவெறுப்பாக‌

உலகம் அறியாத‌
கிணற்றுதவளை போல்
உனை அறியாமல்
நினைவால் கெடுகிறேன் ..

புதைந்து ஆசைகள்
உனக்க்கும் இருக்கும்
மீட்பேன் காதலை..
ஆழமில்லை..

No comments: