அன்று இரவு உறக்கத்தில்
அலறி அடித்து எழுந்தேன்
என் தூக்கத்தை
விழுங்கிய கனவு
திறந்த கண்ணுக்கு
தெரியாத உண்மை
மூடிய கண்முன்
முழிக்கிறது
.. வீட்டில் அனைவரும்
விறுவிறுபாய்
மூட்டைகள் கட்டினார்கள்
அறுவெறுப்பாய்
யாருக்கத்தான்
அழுகை வராது
இந்த மண்ணைப்பிரிய
மனமே வராது
சத்தம் வந்தால்
வானத்தை பார்த்தார்கள்
அச்சத்துடன்
கட்டிய மூட்டையுடன்
கிளம்பவேண்டும்
நாங்கள் மிச்சத்துடன்
நடுக்கூடத்தூணை
கட்டிக்கொண்டு
கண்களங்கி அழுகுரல்கள்
கதறிகொண்டு
பாசி படிந்த என் கொல்லைச்
சுவர் பாசம் வளர்த்த என்
குட்டிச்சுவர்
என் ஆறு வயது ஆசைஎல்லாம்
அதன் மேல் மீண்டும் ஒரு முறை
முட்டிடத்தான்
நேரம் அதிகம் இல்லை
ஓட வேண்டும் எல்லைக்கு
ஓரே வேகமாக ஓட்டம் பிடித்தேன்
கொல்லைக்கு
திடீரென ஒரு சத்தமும் புகையும்
நான் முட்ட வந்த சுவரின் துகல் என்னை
வந்து முட்டியது
அடிப்பட்டு என் தலையில்
இரத்தம் வழிந்தது
குண்டுகள் துலைத்து
ஊரெங்கும்
சத்தம் வழிந்தது
அலறி அடித்து எழுந்தேன்
அன்று இரவு உறக்கத்தில்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment