Wednesday, April 8, 2009

தொலைந்த நண்பனை தேடுங்க‌ள் ..

தனிமையில்
கண்ணீர் வடித்து
கடல் வளர்த்த‌
தீவுகள் 

உச்சியில் 
ஏக்கத்துடன் 
உரைந்து இருக்கும் 
இமயம் 

துணையின் 
தேவை என்ன?
விடைகூறும் 
விலாசம் இவை 

தொலைந்த
நண்பனை 
தேடுங்க‌ள் 

பொறாமையில்
பேராசையில் 
அலுவலின் அலைக்கழிப்பில் 

தொலைந்த  
நண்பனை
தேடுங்க‌ள் 

உணர்வுகளை
உலகில் உலவவிட‌ 
வடிகால் 
தேடுங்க‌ள் 

வேட்டையாடவே ஓநாய்கள்
நட்பிருக்கும் 
அச்சத்துடனே மான்கள்
இணைந்திருக்கும் 

தொலைதூர நட்பையும் 
இணையதள‌த்தில் அழைத்து  
அன்பால் 
இணைந்திடுங்கள்

No comments: