Tuesday, April 21, 2009

எங்க ஓட்டுப்போடனும்..

ஜனதொகை
ஏரிப்போச்சு
எங்க ஊருல‌

தலைக்க்கு ஒரு
ஓட்டுதான்
மதிப்பு
வேறில்ல‌

காந்திக்கடுத்து
ரூபா நோட்டில்
வேற முகமில்ல‌

நாணயதுக்கு
கூட இங்க‌
நாண‌யமில்ல‌

எங்க ஊரு
செழிக்கனுன்னு
ஓட்டு போட‌
சொன்னாங்க‌

உள்ளங்கை
கரையெடுத்து
விரலில் பொட்டு
வெச்சாங்க‌

சொன்னதெதுவும்
நடக்கலியே
சரியாதான்
போட்டேனா?

ஓட்டுப்போட‌
வழித்தவறி
வேறெங்கோ
பூட்டேனா??

No comments: