செழிப்பிருந்தது
உழவன் முகத்தில்
களிப்பிருந்தது
நம்பிக்கை வளர்த்த
பூமி அது
பிறக்கப்போகும்
பிள்ளைக்கு
அடுத்த அறுவடை
அள்ளித்தந்திடும்
இவன் முகத்தில்
இருமாப்பு
மனைவியின் முகத்தில்
புன்சிரிப்பு
குலுங்கும் வலையோசை
தகப்பன் பெருமையை
கருவிடமும்
கூறியது
வானம் பார்த்த
பூமி அல்ல
வாய்க்கால் வார்த்த
பூமி
அரசியலும்
அசுத்தமும்
ஆற்றைக்கெடுத்தது
வரம் தரும் விதைகள்
வரண்டது
மண்ணோடு
பச்சை ஆடை
பறிபோனது
பழுப்பு நிறத்துடன்
நிர்வாண பூமி
ஊரின் மகிழ்ச்சியை
பஞ்ஞம் கெடுத்தது
புலம்பளுடன் ஊரே
படையும் எடுத்தது
ஒருவருடம் தான்
தீர்ந்துவிடும்
உஙகள் கவலையும்
ஓய்ந்துவிடும்
தலைவர்கள் எல்லாம்
தைரியும் கூறினர்
கும்பலைக்கலைக்க
பொய்க்கதை கூறினர்
வீணாகவில்லை
புரட்சி ஆனால்
ஒரு வருடம்
வரட்சி
நிற்க நிழலில்லா
ஊரில்
இவன் நிழல்
தேடி பிறந்தது
பெண் குழந்தை
தாயும் சேயும்
நலம் ஆனால்
தந்தைக்கு இல்லை
பலம்
பெண்ணை எப்படி
பேணி வளர்ப்பான்
இருபதாம் நூற்றாண்டு
உபதேசம் செய்ய
வந்திடும்
ஆனால் இன்று
உதவிக்கு அல்ல
ஊரெங்கும் இவன்
கவலைக்கு தீர்வு
ஒன்றுதான்
கள்ளிப்பால் அவன்
கையில் கசிந்தது
மழலை பசியுடன்
வாயைக்குவிழ்த்தது
வெளுத்ததெல்லாம் பால்
குழந்தை நம்பியது
பச்சை முகம் பார்த்து
அவன் மனம் வெம்பியது
விஷத்தை விசிரி
எரிந்தான்
அள்ளி அனைத்து முத்தமிட்டான்
முத்து மகளை
அடுத்த அறுவடைக்கு
பொருத்திரு மகளே
இந்த வயலும் செழித்துடும்
நம் வாழ்வும் செழித்துடும்
இவன் நம்பிக்கை வாழ்ந்தது
பொய்க்கதையில்
வெளுத்ததெல்லாம் பால்தான்
இவன் கதையில் ..
No comments:
Post a Comment