Sunday, April 12, 2009

இந்த வாரம் ம‌ழ‌ வருமா !!

பருத்தி வித
பஞ்ஜோட  
பறப்ப‌து
போல் மனசு  

நினைனெனக்க‌ 
தூக்கம் வர்ல்ல‌ 
எனக்கு இது 
புதுசு  

பாதிகனவில் 
எழுந்திரிசேன் 
அவ முகத்த  
பாத்து  

நிலவில் கூட‌
அவ முகம் தான்  
ஏங்குது மனம்  
வேர்த்து  

சுரா மீன‌ 
வலையிலாம‌ 
வெரும் கையால் 
புடிப்பேன்  

அந்த மீனப் போல‌ 
கண்ண பாத்து  
வ‌லையில் நான் 
விழுந்தேன்  

பரங்கிமலை உயர்த்துள‌ 
நிமிர்ந்து நின்னயென்ன  
பாலைவனமாக்கிப்புட்டு 
போனா அந்த‌ பொண்ணே  

குலுகுலுன்னு  
வொன் பேச்சில் 
சாரல்  
வரும்  

நீ சம்மத‌ன்னு 
சொல்லிப்புட்டா 
மழையும்  
வரும்

No comments: